Offline
பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டைமறுத்து விசாரணை கோரிய தந்தை
Published on 07/28/2024 23:50
News

கோல க்ராய் கம்போங் சுங்கை சாமில் ஜூலை 21 அன்று தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 44 வயதான ரப்பர்  தோட்டத் தொழிலாளி மீது கோத்தா பாரு அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி சுல்கிப்ளி அப்துல்லா முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, ​​பிரதிவாதி குற்றமற்றவர் என்று விசாரணை கோரியதாக பெரித்தா ஹரியான்  செய்தி வெளியிட்டிருந்தது.

முதல் குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சம் 10  பிரம்படியும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 376(3) பிரிவின் கீழ், ஜூலை 21 அன்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

இரண்டாவது குற்றச்சாட்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 15(C) இன் கீழ் அவர் தனது மகளுக்கு எதிராக உடல்ரீதியாக அல்லாத பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது 20,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். இரண்டு குற்றங்களும் அதிகாலை 5 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

பிரதி அரசு வழக்கறிஞர் அஹ்மத் ஃபைஸ் ஃபித்ரி முகமட் அவர்களால் வழக்குத் தொடரப்பட்டது. அதே நேரத்தில் பிரதிவாதி சார்பில்  வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. முன்னதாக, மூன்று குழந்தைகளுக்கு தந்தையான குற்றம் சாட்டப்பட்டவர் வேண்டுமென்றே குற்றங்களைச் செய்யவில்லை என்று கூறி ஜாமீன் கோரினார்.

எவ்வாறாயினும், வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுவது சொந்த மகள் என்பதன் அடிப்படையில் ஜாமீன் வழங்கக் கூடாது என்று ஃபைஸ் கோரினார். சுல்கிஃப்ளியின் ஜாமீன் மறுக்கப்பட்டதோடு வழக்கிற்கான அடுத்த தேதி ஆக.28ஆம் தேதியை நிர்ணயித்தார்.

Comments