Offline
சுற்றுலா பஸ் – லாரி மோதி கோர விபத்து; 24 பேர் பலி
Published on 10/29/2024 10:34
News

மெக்சிகோ சிட்டி,வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு நேற்று சுற்றுலா பஸ் புறப்பட்டது. பஸ்சில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளது.

இந்த கோர விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Comments