Offline
கொலம்பியாவில் சோகம்: சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 13 பேர் பலி
Published on 01/07/2025 00:47
News

போகோடா:கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் 8,000 பேர் பலியாகிவருகின்றனர் என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கொலம்பியா நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30க்கும் அதிகமானோர் பயணித்தனர்.அந்தப் பேருந்து வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து அங்கு வந்த மீட்புக்குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். விபத்து குறித்து  போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments