பேங்காக்: தாய்லாந்து, மியன்மார் எல்லையில் உள்ள இணைய மோசடி நிலையங்களை குறிவைத்து, அங்கு வழங்கப்படும் மின்சார இணைப்பை துண்டிக்க முடிவு செய்துள்ளது. பல நாடுகளின் மக்கள் இவ்வகை குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, அங்கு கட்டாயமாக வேலை செய்யப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது. இந்த செயல்கள் ஆண்டுக்கு பல பில்லியன் டாலர் அளவில் விரிவடைந்துள்ளன. தாய்லாந்து துணைப் பிரதமர் பும்தாம் வீசாயாச்சை, மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க உத்தரவிடப்பட்டது என்றும் கூறினார்.