ரவூப்:
டிராஸ் பாலம் அருகே ஓல்ட் ரவூப்-பெந்தோங் சாலையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்ததில் ஐந்து வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று (பிப்ரவரி 11) மாலை 6 மணியளவில் விபத்து நடந்த இடத்திலேயே குறித்த சிறுமி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக ரவூப் மாவட்ட காவல்துறை தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
டுரியான் தோட்டத் தொழிலாளியான பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை, டிரானமில் இருந்து ரவூப் நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தக்கார் “சம்பவ இடத்தை அடைந்ததும், அவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வாகனத்திலிருந்து இறங்கி மயக்கமடைந்த தனது மகளை தூக்கிச் சென்றார்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.