2021 டிசம்பர் மாதம், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான ஷாகிதி கான் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்திற்கு சென்றார். அங்கு குழந்தை பராமரிப்பாளராக பணிபுரிந்த அவர், 2022 ஆகஸ்ட் மாதம் ஒரு குடும்பத்தின் ஆண் குழந்தையை பராமரிக்கத் தொடங்கினார். 2022 டிசம்பர் 7ம் தேதி அந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, அவன் உயிரிழந்தது.
இந்த சம்பவத்தில், ஷாகிதி கான் மீது குழந்தையை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் 2023 பிப்ரவரி 10ம் தேதி கைது செய்யப்பட்டார், மற்றும் அதன்பின் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2023 ஜுலை 31ம் தேதி மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஷாகிதி கானின் தந்தை, மகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசிடம் பல முறை மனு கொடுத்தார். கடந்த 14ம் தேதி, ஷாகிதி கான் தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறி, இந்த விஷயத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்க கோரியிருந்தார்.
இந்த மனுவின் விசாரணையில், மத்திய அரசு வழக்கறிஞர் கூறியபடி, ஷாகிதி கானுக்கு பிப்ரவரி 15ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசு மத்திய அரசுக்கு பிப்ரவரி 28ம் தேதி தகவல் வழங்கியுள்ளது. மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டும், குழந்தை கொலை குற்றத்திற்கு அமீரகத்தில் கடுமையான சட்டங்கள் காரணமாக ஷாகிதி கானை காப்பாற்ற முடியவில்லை. அவரது இறுதிச்சடங்கு 5ம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதில் பங்கேற்க அவரது குடும்பத்தினருக்கு அபுதாபி அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது