Offline

LATEST NEWS

தலைமைத்துவத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பீர் – பிரதமர்
Published on 03/09/2025 13:35
News

கோலாலம்பூர்: தலைமைத்துவத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அரசுத் துறை தனியார் நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்தார். பொது சேவைத்துறையில் பெண்களின் பங்களிப்பு குறைந்தது 30 விழுக்காடாக உயர்ந்துள்ள நிலையில், அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்குள் இன்னும் பலவற்றை அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். உயர் தலைமைத்துவ பதவிகளில் பெண்களின் மொத்த எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது என்பதை நிறுவனங்கள் மதிப்பீடு செய்யத் தொடங்க வேண்டும்.

 

உயர் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்களிப்பு சாத்தியம் என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடியாவிட்டால், தனியார் துறையும் அதை ஏற்றுக்கொள்வது கடினமாகிவிடும் என்று அவர் சனிக்கிழமை (மார்ச் 5) அனைத்துலக மகளிர் தினமான 2025ஐ தொடக்கி வைத்தபோது கூறினார். சுதந்திரம், ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பதில்  பெண் தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை அன்வார் எடுத்துரைத்தார்.

 

மலேசியா மடானியின் வெற்றியை உறுதி செய்வதில், குழந்தைகளின் ஒழுக்கம் அறிவியல் மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதன் மூலம் குடும்பத்தின் பங்கிலிருந்து தொடங்குகிறது. எனவே, சமூகம்  தேசிய வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் ஒருங்கிணைந்ததாகும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வின் போது, அன்வார் தேசிய மகளிர் கொள்கையையும் தொடங்கி வைத்தார். முன்னேற்றத்திற்கான வாய்ப்பை அங்கீகரித்து, பெண்கள் அதிகாரமளிப்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்ய அனைத்து அமைச்சகங்களையும் வலியுறுத்தினார். பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ நான்சி ஷுக்ரியும் கலந்து கொண்டார்.

 

அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான மலேசியாவை உருவாக்குவதற்கு தேசிய வளர்ச்சியில் பெண்களுக்கு அதிகாரமளிப்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் நாட்டின் திசையை வடிவமைப்பதற்கும் மூலோபாய நடவடிக்கைகள் மூலம் இதை அடைய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

Comments