Offline
டத்தோ’ பட்டம் கொண்ட கணவரால் 20 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்
By Administrator
Published on 05/02/2025 13:58
News

சுமார் 20 வருடங்கள் "டத்தோ"வுடனான கொடுமையான திருமண வாழ்க்கையில் சிக்கியிருந்த 41 வயது பெண் பிரியாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை இது. திருமணத்திற்கு முன்பே வன்முறைக்கான அறிகுறிகள் தென்பட்டன. வாக்குவாதத்தின்போது சாலையில் தனியாக விடப்பட்டதும், திருமண நாளன்று காயங்கள் ஏற்பட்டதும்தான் அந்த மோசமான அறிகுறிகள். திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்காக தனது மருத்துவக் கனவுகளை விட்டொழித்தார் பிரியா. ஆனால், கணவனின் தவறான நடத்தைகளை மறைக்க பொய்யான கதைகளை சொல்ல வேண்டியதாயிற்று. கர்ப்ப காலத்தில் கூட கொடுமை தொடர்ந்தது. ஒருமுறை படியிலிருந்து கூட தள்ளிவிடப்பட்டார். மகனே தலையிட்டு தந்தையைத் தடுத்தபோதுதான், குழந்தைகளுக்காகவாவது இந்த நரகத்திலிருந்து வெளியேற முடிவு செய்தார். விவாகரத்துக்குப் பிறகும் ஜீவனாம்சம், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை கணவர் சரியாகக் கொடுக்கவில்லை. பல வருட கொடுமைக்குப் பிறகு தப்பித்த பிரியா, தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடம் உருவாக்க விரும்புகிறார். கொடுமை செய்பவர்களுக்கு சிறைத்தண்டனையோடு மறுவாழ்வும் அவசியம் என்கிறார் அவர்.

Comments