சிரம்பனில், செனாவாங் 1 சாலை சந்திப்பில் நேற்று நள்ளிரவில் சிக்னலை மீறிய வேன் ஒன்று மோட்டார்சைக்கிளை மோதி, 20 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். யமஹா Y15ZR ஓட்டிச் சென்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. இதே இடத்தில் மார்ச் மாதத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. விபத்தில் ஈடுபட்ட 44 வயது வேன் ஓட்டுநருக்கும், அவருடன் பயணம் செய்த 20 வயது பெண்ணுக்கும் குடிபோதையில் இல்லை என சோதனை மூலம் தெரியவந்தது. இது தொடர்பாக சாலை போக்குவரத்து சட்டத்தின் பிரிவு 41(1)ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.