ஐந்து வயது சிறுவனை பல மணி நேரம் வேனில் பூட்டி வைத்து மரணத்திற்கு காரணமானதாக 57 வயது ஓட்டுநர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குழந்தை கைவிடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.குற்றவாளியான யாவு சீ வெங், நீதிபதி முகமது காலித் அப்துல் கரிம் முன்னிலையில் மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், தான் குற்றவாளி இல்லை என்று கூறினார்.குற்றச்சாட்டின் படி, ஓய்வு பெற்றவரான யாவு, பாதிக்கப்பட்ட சிறுவனின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 8 மணி முதல் நண்பகல் 12.05 மணி வரை ஜொகூர் பாரு, Taman Bukit Indah-வில் உள்ள வாகனத்தில் சிறுவனை கைவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த குற்றம் குழந்தைகள் சட்டத்தின் 31(1)(a) பிரிவின் கீழ் வருகிறது. இதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.துணை அரசு வழக்கறிஞர் ஷரிஃபா நடாஷா சையத் அகமது RM15,000 பிணைத்தொகையும் கூடுதல் நிபந்தனைகளையும் முன்வைத்தார். ஆனால் நீதிமன்றம் ஒரு நபர் பிணையில் RM7,000 பிணைத்தொகை விதித்தது.யாவு தனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும், வழக்கு முடியும் வரை அரசு தரப்பு சாட்சிகளைத் தொடர்பு கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும் வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கும் ஜூன் 16-ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.