Offline
போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
By Administrator
Published on 05/10/2025 09:00
News

அனந்த்நாக், காஷ்மீரில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் துல்லியமாக தாக்கியது. பாகிஸ்தான் பதிலடி எடுப்போம் எனக் கூற, இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், பாதுகாப்பு காரணமாக அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என்றும், தேவையெனில் அமெரிக்கர் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

உயரும் பதற்றம், தாக்குதல் எச்சரிக்கை, ஆளில்லா விமானங்கள் தொடர்பான தகவல்கள் ஆகியவை இந்த நடவடிக்கைக்கு காரணமாகும்.

Comments