கெரிக்-ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் லோரி மோதியதில் யானைக் குட்டி இறந்தது. அதன் தாய் லோரியின் முன்பகுதியை சேதப்படுத்தியது. கோழிகளை ஏற்றிச் சென்ற லோரி ஓட்டுநர் யானை சாலையோரத்தில் மேய்வதை பார்த்து சென்றபோது, குட்டி யானை திடீரென குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டது. குட்டி சம்பவ இடத்திலேயே இறந்தது. கோபமடைந்த தாய் யானை லோரியை சேதப்படுத்தியது. ஓட்டுநர் காயமின்றி தப்பினார். வனவிலங்குத் துறையினர் யானையை அமைதிப்படுத்தினர். வனப்பகுதிகளில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.