உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 3 வருடங்கள் நிறைவடைந்து நான்காவது வருடம் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு முயன்றன. டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரானதும் உக்ரைன்-ரஷ்யா இடையே 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை வழங்கினார். உக்ரைன் ஏற்றுக்கொண்டாலும் ரஷ்யா ஏற்கவில்லை.
சமீபத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, இங்கிலாந்து அதிகாரிகள் உக்ரைன் அதிபரை சந்தித்து திங்கட்கிழமை முதல் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்தியதாக தெரிகிறது. உக்ரைன் நிதியமைச்சர் அந்த்ரி சிபிஹா, நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உக்ரைனும் அதன் நட்பு நாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில், ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததன் 80வது ஆண்டு விழாவையொட்டி ரஷ்யா 3 நாள் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டபோதும், அதை 700 முறைக்கு மேல் மீறியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது