சென்னை: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டது. நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். உயிர் காக்கும் மருந்துகளின் மூலப்பொருட்கள் கூட அனுப்பப்படாது. மத்திய அரசின் உத்தரவின்படி ஏற்றுமதி நிறுத்தம். இதனால் ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம். பிற நாடுகளுக்கான ஏற்றுமதி தொடரும். போர் பதற்றத்தால் பல நாடுகள் கூடுதல் மருந்துகளைக் கேட்கின்றன