Offline

LATEST NEWS

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்; எல்லையோர நகரங்கள் இருளில் மூழ்கின
By Administrator
Published on 05/12/2025 09:00
News

புதுடெல்லி: ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலி. இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், போர் நிறுத்தம் இன்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்தது. எனினும், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் ராஜஸ்தான் பார்மர், ஜெய்சால்மர், பஞ்சாப் பதான்கோட், பலோட் பகுதிகளில் மின் தடை. அமிர்தசரஸிலும் மின் தடை செய்யப்படலாம். ஜம்மு, கத்துவா, உதம்பூரிலும் மின் நிறுத்தம். உதம்பூரில் பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. குஜராத் கட்ச்சில் ட்ரோன்கள் தென்பட்டதால் மின் தடை. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.

Comments