இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது. பூஞ்ச், ஜம்முவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. சாலைகளில் வாகனங்கள் வழக்கம் போல் சென்றன. நேற்றிரவு ட்ரோன், ஏவுகணை தாக்குதல் இல்லை. பஞ்சாபிலும் இயல்பு நிலை திரும்பியது. மக்கள் சாலையில் நடமாடும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு தாக்குதல் எதுவும் நடக்கவில்லை.