Offline

LATEST NEWS

இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
By Administrator
Published on 05/12/2025 09:00
News

வாஷிங்டன் டி.சி., ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22 பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலி. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. போர் பதற்றம் நிலவிய நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என்று டிரம்ப் அறிவித்தார். இந்தியாவும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணி முதல் தரை, வான், கடல் வழியேயான போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. ராணுவ தளபதிகள் மே 12-ல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ இயக்குனரும் தொலைபேசியில் பேசியதாக இந்தியா தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய போர் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்தது

Comments