துவாஸ் சுங்கச் சாவடி அருகே நடந்த விபத்து தொடர்பாக சிங்கப்பூர் வாகனமோட்டியை மலேசியக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
27 வயது Maserati கார் ஓட்டுநர் சட்டவிரோதமாகத் த U-Turn செய்ததில் சாலையின் நடு தடுப்பில் மோதியதாகக் கூறப்படுகிறது. அது மோதிய வேகத்தில் சாலைத் தடுப்பு இரும்புகள் எதிர் திசைக்குப் பறந்துசென்று, நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டது.
அதில் 26 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே மாண்டார்