"வெசாக்" என்பது பௌத்தர்களின் புனித மாதமான "விசாகா" என்ற பூரணச்சந்திர நாளை (பௌர்ணமி) என்று குறிக்கும் பெயராகும். இந்த நாளில் தான் புத்தர் பிறந்தார் அது மட்டுமல்லாமல், புத்தத்துவத்தை (அறிவொளி) அடைந்தது மற்றும் பரிநிர்வாணம் பெற்றார். அதனால்தான் இந்த ஆகிய மூன்று விஷயங்கள் நிகழ்ந்ததாக நம்பப்பட்டு மக்கள் அனைவரும் இந்த நாளை மிக கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
அடுத்ததாக வெசாக் தினத்தன்று பௌத்த மக்கள், காலையில் ஆலயங்களுக்கு சென்று புத்தருக்காக பூஜை செய்வது மட்டுமல்லாமல் ஆலயங்களை விளக்குகளால் அலங்கரிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மக்கள்கள் அனைவரும் புத்தரின் சிலை அருகே பூச்சொற்கள், மெழுகுவர்த்திகள், விளக்குகள் போன்றவற்றை வைத்து வழிப்படுகின்றார்கள். இதில் ஒரு முக்கிய அம்சம்தான் தானம் செய்வதாகும் உதாரணத்திற்கு ஏழைகள், யாசகர்கள், அல்லது சமூக சேவைகளுக்குத் தானம் வழங்குவது இதுபோன்ற செயல்கள் புண்ணியமாகக் கருதப்படுகிறது.
மேலும் இவ்விழாவில் பசுக்கள், இறைச்சி கொள்வது மற்றும் அசைவ உணவுகளும் உண்பது தவிர்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உணவுகளில் சைவ உணவுகளே இந்நன்னாளில் பரிமாறப்படுகின்றன. ஒரு சிலர் தவம் மற்றும் விரதம் எடுத்து முழு நாட்களையும் கழிக்கின்றார்கள். இந்நன்னாளில் புத்தரின் போதனைகளில் தர்மம், அன்பு, அமைதி, பொறுமை, சிந்தனை ஆகியவை வாழ்க்கையில் முக்கியம் என்பதை நினைவுபடுத்தும் நாள் மட்டுமல்லாமல் இன்றை வரை மக்கள் இதை கடைப்பிடித்து வருகின்றார்கள். இந்த விசா தினத்தை கோலாகலமாக கொண்டாடும் நாடுகள் ஸ்ரீலங்கா ,தாய்லாந்து மெயின்மார் ,கம்போடியா, சிங்கப்பூர், மற்றும் இந்தோனேசியா ஆகும்.
விசா தினமன்று பௌத்தர்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள்:
1.ஆலயங்களுக்கு சென்று பூஜை செய்வது
2.தானம் செய்வது (உணவு, பணம், சேவை)
3.விளக்கேற்றி வீடுகளையும் ஆலயங்களையும் ஒளிரச் செய்வது
4.புத்தரின் போதனைகள் பற்றி வாசிப்பதும் கூறுவதும்
5.அமைதியாகவும், தர்மவழியில் வாழ உறுதிப்படைவதும்
இவ்வாறு, வெசாக் தினம் என்பது ஆன்மீகத்தையும், மனித நற்பண்புகளையும் மேம்படுத்தும் ஒரு புனித நாளாக கருதப்படுகிறது.