1894ல் உருவான பிரிக்பீல்ட்ஸின் மகா விஹாரா கோவிலில் இன்று வெசாக் தினத்தையும், கோவிலின் 130வது ஆண்டு விழாவையும் ஆயிரக்கணக்கான புத்தபக்தர்கள் கொண்டாடுகின்றனர். இரு இலங்கை புத்தசனியாசிகள் 1895ல் வெசாக் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர். இது புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய மூன்றையும் ஒரே நாளில் நினைவுகூரும் புனித நாள். 1961ல், மலேசிய அரசிடம் இந்த தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டிய கோரிக்கை எழுந்தது; 1962ல் அது நிறைவேற்றப்பட்டது. இந்த நாளை நினைவுகூர உலகெங்கிலும் உள்ள புத்தமதத்தவர்கள் மலேசியாவுக்கு வருகிறார்கள்.