2018 முதல் 2024 வரை, மலேசியாவில் சட்டவிரோத கிறிப்டோகரன்சி மைனிங் தொடர்பான மின் திருட்டுகள் 300% வரை அதிகரித்துள்ளன என்று தெனாகா நாசியனல் பெர்ஹாட் (TNB) தெரிவித்துள்ளது.
மின்சாரம் திருட்டை கண்டறிவதற்காக, சக்தி ஆணையம், போலீசார், ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் உள்ளூராட்சி சபைகளுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் 2018இல் 610 வழக்குகள் இருந்த நிலையில், 2024இல் அது 2,397 ஆக அதிகரித்துள்ளது.
2020 முதல் 2024 வரை ஆண்டுக்கு சராசரியாக 2,303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாதத்திற்கு சராசரி 340 புகார்கள் அளிக்கப்படுகின்றன, இது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
சந்தேகமான மின் பயன்பாடுகளை கண்டறிய TNB ஸ்மார்ட் மீட்டர்கள் மற்றும் புலனாய்வு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு செய்கிறது. மின்கடத்தல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என TNB எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, பெராக், ஹுலு திரெங்கானு, மராங் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல சட்டவிரோத மைனிங் வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மின்னணு பொருளாதாரம் நோக்கி நகரும் மலேசியாவில், டிஜிட்டல் நாணய வளர்ச்சிக்கு ஒத்துப்போகும் வகையில் கட்டுப்பாடும் வலுவாக இருக்க வேண்டும் என TNB வலியுறுத்துகிறது.