Offline
பிரிக்ஃபீல்ட்ஸ் முதல் தும்பாட்டை வரை: அமைதியும் ஆன்மிக பல்வகைமையும் செறிந்த வேசாக் தினம்!
By Administrator
Published on 05/13/2025 09:00
News

மலேசியாவில் இந்தாண்டு வேசாக் தினம், புத்தர் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூறும் விழாக்களாக நாடுமுழுவதும் அமைதியும் ஒற்றுமையுடனும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக குவாலாலம்பூரின் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியிலுள்ள புகழ்பெற்ற புத்த மகா விஹாரா கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். இந்த நிகழ்வில் பல்லின, பலமத மக்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டு மலேசியாவின் ஆன்மிகப் பல்வகைமையை அனுபவித்தனர். மற்ற மதத்தினரும், சுற்றுலாப் பயணிகளும் இந்த அமைதி நிறைந்த அனுபவத்தை பாராட்டினர்.

Comments