காஸா நெருக்கடி குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அங்கு உணவு உள்ளிட்ட உதவிகள் தடைப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான நிலைமை மோசமாக இருப்பதாக ரூபியோ தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினர் உதவிகளைத் திருடாத வகையில், காஸாவிற்குள் உதவிகளை கொண்டு செல்ல மாற்று வழிகளை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து நெதன்யாகுவுடன் பேசியதாகவும், ஹமாஸை ஒழிப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாகவும் ரூபியோ கூறினார். ஹமாஸ் சரணடைந்தால் மட்டுமே நிரந்தர அமைதி திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.