கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான "நீதானே என் பொன்வசந்தம்" படத்தில், காமெடி நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா.கடந்த ஆண்டு லாக்டவுன் காலத்தில், சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடந்தது.இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில், உருவ கேலி மற்றும் சினிமா வாய்ப்புகள் குறித்து வித்யுலேகா கூறிய கருத்துகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.அவர் கூறியதாவது: "நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன் என்கின்ற வதந்திகளைப் பரப்பி, எனக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பல படங்களில் எனது உருவத்தை வைத்து காமெடி காட்சிகளில் கேலி செய்யப்பட்டது. ஆனால், தனுஷ் இயக்கிய 'பி. பாண்டி' படத்தில் மட்டும் எந்தவொரு காமெடி கேலியோ, வசனமோ இல்லை. மற்றவர்கள் எல்லாம் பாடி ஷேமிங் செய்தனர்.