அட்லி தனது முதல் தெலுங்கு படத்துக்காக பிரமாண்டமாக தயாராகி வருகிறார். புஷ்பா 2-ல் நடித்த அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆறு ஹீரோயின்கள் இருப்பதாக கூறப்பட்டு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் இதில் நடிக்கலாம் என தகவல்.
மூன்று அல்லு அர்ஜுன்கள் கதையில் இருப்பதாகவும், இது அட்லியின் மெர்சல் பட ரீமேக் ஆகும் என கோலிவுட் வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நயன்தாரா, சமந்தா ஆகியோருக்கு வாய்ப்பு இல்லையெனினும், இப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஜவான் மூலம் ₹1000 கோடி வசூலித்த அட்லி, தெலுங்கிலும் அதே வெற்றியை காண முடியுமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு ஆக உள்ளது.