அருந்ததிகாரிகளால் துரத்தப்பட்ட வேகமான பின் தொடரில், குறைந்தபட்சம் ஏழு சட்டவிரோத குடிபுகுந்தவர்களை ஏற்றிக் கொண்டிருந்த காரொன்று இன்று அதிகாலை வகாஃப் பாருவில் சாக்கடையில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.விபத்து இன்று காலை 6.30 மணியளவில் வகாஃப் பாருவுக்கு அருகே உள்ள தாமன் ஸ்ரீ கெபாக்காத்தில் இடம்பெற்றது. இதில் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (MMEA) உட்பட பல அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.தீயணைப்பு மற்றும் மீட்புப் படை பேச்சாளர் கூறுகையில், 6.32 மணிக்கு 999 அவசர எண்கள் வழியாக தகவல் பெறப்பட்டதும், வகாஃப் பாரு மற்றும் கோட்டா தருல் நைம் நிலையங்களில் இருந்து இரு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்."மொத்தம் எட்டு பேருடன் சென்ற கார், வீதியில் இருந்து வழுக்கி அருகிலுள்ள சாக்கடையில் விழுந்தது.விபத்திடத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் பல்வேறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்," என்றார் அவர்.