மலாக்கா, தாமான் ஆர்கெட் ஶ்ரீ ரம்பா அருகே நேற்று இரவு ஜாலான் தஞ்சோங் மின்யாக்கில் நிகழ்ந்த விபத்தில், 20 வயதான தொழிற்சாலை ஊழியர் ஷாஃபி ஷாரி உயிரிழந்தார்.அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், 50 வயதான ஆசிரியர் ஓட்டிச் சென்ற MPV மீது மோதியதாகக் கூறப்படுகிறது. சம்பவம் தாமான் டெக்னோலாஜி செங்கிலில் இருந்து வீடு திரும்பும் வழியில், இரவு 10 மணிக்கு நிகழ்ந்தது.விபத்தில் ஷாஃபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; ஆசிரியர் காயமடையவில்லை. இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.