பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸ்ஸாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரஃபிஸி ரம்லி ஜூன் 17 முதல் பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர், கட்சி ஆதரவை இழந்த நிலையில் அமைச்சரவை பதவியில் தொடருவது பொருத்தமற்றது எனக் கூறினார்.ராஜினாமா அறிவிப்பில், பிகேஆர் கொள்கைகளை அரசு திட்டங்களாக மாற்றும் பணி இனி தமக்கில்லை எனத் தெரிவித்தார். 13ஆவது மலேசியா திட்டத்தை முடிப்பதே தனது கடைசி அமைச்சுப் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.அமைச்சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த ரஃபிஸி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.