பஞ்சாப் பதிண்டாவில் பணியாற்றிய அமந்தீப் கவுரை, சமூக வலைதளங்களில் "இன்ஸ்டா குயின்" என புகழ்பெற்றார். போலீஸ் விதிமுறைகள் மீறிய வீடியோக்கள் மற்றும் சந்தேகமான வங்கி பரிவர்த்தனைகள் காரணமாக விசாரணை நடைபெற்றது.அவரது சொத்துக்கள் வருமானத்திற்கு அதிகமாக இருப்பதால், விஜிலன்ஸ் பங்குத்துறை நேற்று கைது செய்து விசாரணை தொடங்கியுள்ளது. அமந்தீப்புடன் தொடர்புடைய மற்றொருவர், பல்விந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்.அமந்தீப்பை போதைப்பொருள் (17.71 கிராம் ஹெராயின்) வைத்திருந்ததால் ஏப்ரல் 2ஆம் தேதி கைது செய்து, அவர் பணியிடத்திலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஆடி, இரண்டு இன்னோவா கார்கள், ராயல் என்ஃபீல்டு பைக் மற்றும் 2 கோடி மதிப்புள்ள வீடு அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.