ஈரானுடன் நடைபெறும் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடையுமானால், ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பின் கீழ் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈரானின் அணு நிலையங்களை பார்வையிட அனுமதிக்க வாய்ப்பு இருப்பதாக, ஈரான் அணு முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி புதன்கிழமை தெரிவித்தார்.
"விரோத நாடுகளின் ஆய்வாளர்களை அனுமதிக்காதது இயல்பானது. ஆனால், ஒப்பந்தம் ஏற்பட்டால், ஐஎஏஏயில் பணிபுரியும் அமெரிக்க ஆய்வாளர்களுக்கு நாங்கள் அனுமதி அளிக்கலாம்," என அவர் கூறினார்.