2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா, உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்கள் கொடுக்கப்பட்டு பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.இப்போது தெற்கு ஆசியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து, இந்தியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மே 28 வரை 1,009 தொற்றுகள் உறுதி; கேரளா, மராட்டியம், டெல்லி அதிக பாதிப்பு. அறிகுறிகள் லேசானதாக உள்ளன.சீனாவில் தொற்று விகிதம் மே மாதத்தில் 6.3% முதல் 15.8% ஆக உயர்ந்து, 1.68 லட்சம் பேர் பாதிப்பு, 9 பேர் மரணம். தாய்லாந்தில் 1.87 லட்சம் பாதிப்பு, 44 மரணம். சிங்கப்பூரில் 14,200 பேர் தொற்று.உலக சுகாதார அமைப்பு மக்கள் முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது.