வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 160 வது கிலோமீட்டரில் 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தையும் இளம்பெண்ணும் காயமடைந்த நிலையில், ஏனைய 9 பேர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பினர்.
நேற்று நண்பகல் 12.38 மணிக்கு குறித்த விபத்து ஏற்பட்டதாக அவசர அழைப்பைப் பெற்றதும், சம்பவ இடதிற்கு மீட்புப் படையினர் விரைந்ததாகப் பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார்.“குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, விபத்தில் ஆறு கார்கள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, இருப்பினும் அவற்றில் மூன்று ஏற்கனவே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டன,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை, மேலும் விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல் துறையினர் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.