ஜப்பான் அரசு, குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க, நூற்றாண்டுக்கு மேலான பழைய தண்டனைச் சட்டத்தை திருத்தியுள்ளது. ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த புதிய சட்டம், சிறைவாசிகளுக்குப் பணி கட்டாயம் இல்லை என்றும், அவர்களுக்கான வழிகாட்டல், கல்வி போன்ற மறுவாழ்வு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாற்றம் ஜூன் 1க்கு பிறகு தண்டனை பெறுவோருக்கு மட்டுமே பொருந்தும்.