PSG சாம்பியன்ஸ் லீக் வெற்றிக்குப் பிறகு பிரான்ஸில் பெரும் கலவரம் 2 பேர் உயிரிழப்பு, 560 பேர் கைது.பாரிஸ் செயின்ட்-ஜெர்மேன் (PSG) அணி சாம்பியன்ஸ் லீக் வென்றதற்கு பின் பிரான்ஸ் முழுவதும் ஏற்பட்ட கலவரத்தில் 2 பேர் பலியானார்கள், 560 பேர் கைது செய்யப்பட்டனர். 192 பேர் காயமடைந்ததில், 692 இடங்களில் தீ விபத்துகள் நிகழ்ந்தன. காவல்துறை அதிகாரிகள் சிக்கலான சூழ்நிலையில் இருந்தனர்; ஒருவருக்கு பட்டாசு வெடித்து தாக்கியதால் கோமா நிலை ஏற்பட்டது. உள்துறை அமைச்சர் புருனோ ரீடெயில்லோ இந்த வன்முறையை கடுமையாக கண்டித்தார்.