Offline
மெட்மலேசியா: ஜுன் 7 மற்றும் 8-ஆம் தேதி வரை பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும்
By Administrator
Published on 06/07/2025 09:00
News

ஜுன் 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 8-ஆம் தேதி வரை பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

சிலாங்கூர், ஜொகூர், பேராக், பினாங்கு, கெடா, பெர்லிஸ், சபா மாநிலங்களில் நாளை காலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, புத்ராஜெயா, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் பிற்பகலில் வெயிலாக இருக்கும் என மெட்மலேசியா முகநூலில் அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் 8 ஆம் தேதி, பிற்பகலில், பேராக், ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Comments