ஷா ஆலம்:
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் பொலீசார் மேற்கொள்ளப்பட்ட ஐந்து தனித்தனி சோதனைகளில், ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட ஒன்பது சந்தேக நபர்களைக் கைது செய்துள்ள்து.
மேலும் அங்கு RM5.11 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றிய பின்னர், அல்ஸ்டோனியா கும்பல் என்று அழைக்கப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அந்த கும்பல் தலைவர், இ-ஹெய்லிங் ஓட்டுநராக பணிபுரியும் உள்ளூர் நபர் என்றும் அவரது வெளிநாட்டு காதலி ஆகியோர் அடங்குவர் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
அவர்கள் கடந்த எட்டு மாதங்களாக போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
இந்த வெற்றி நடவடிக்கை இரண்டு மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட உளவுத்துறையின் பலனாகும், மேலும் அனைத்து சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.