போர்ட் கிள்ளான்:
நேற்று தஞ்சோங் ஹராப்பானில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் உடல்கள் இன்று காலை மீட்கப்பட்டன.
தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையத்திற்கு அருகில் தேடுதல் மற்றும் மீட்புக்குழுக்களால் காலை 7.45 மணியளவில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பின் செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் முகமட் சயாபிக் சசாலி தெரிவித்தார்