பேரா, பந்தார் பாரு பேரா அருகே, காருடன் நதியில் விழுந்த 31 வயது பெண் ஒருவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.துயர சம்பவம் இன்று மதியம் 1.50 மணிக்கு நிகழ்ந்தது. கணவர் பக்கத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, பெண் மற்றும் குழந்தை கார் உள்ளே இருந்தனர். கார் சறுக்கி நதிக்குள் செல்லத் தொடங்கியதும், கணவர் குழந்தையை மீட்டார். பெண் காரிலிருந்து வெளியே வர முயன்றபோது, வலுவான நீர் ஓட்டத்தில் அடித்து செல்லப்பட்டதாக தெரிகிறது.தீயணைப்பு துறை மற்றும் நீர்மூழ்கல் பிரிவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.