ஜாலான் கிள்ளான் லாமாவில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து குடியேற்ற வீடுகள் தீக்கிரையாயின. செபூத்தே மற்றும் சுற்றுவட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 27 அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். தீ அதிகாலை 2.23 மணிக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உயிரிழப்பு எதுவும் இல்லை. தீவிபத்தின் போது காண்டோமினியத்திலிருந்து எழுந்த புகை மற்றும் தீப்பிழம்புகள் சமூக வலைதளங்களில் பரவின.