நேற்று பண்டார் ஶ்ரீ கோல்ஃபீல்ட்ஸில் உள்ள வெஸ்லி மெதடிஸ்ட் பள்ளியின் உணவகத்தில் குப்பைத்தொட்டி அருகே கருநாகம் ஒன்று சுருண்டு கிடந்த சம்பவம் பள்ளியையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரு மீட்டர் நீளமுள்ள விஷமுள்ள கருப்பு நாகப்பாம்பு தொடர்பில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் பாம்பைப் பிடித்து 25 நிமிடங்களுக்குள் பள்ளி வளாகத்திலிருந்து அகற்றினர்,” என்று சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் மொக்தார் கூறினார்.