தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா, ‘வானம்’, ‘சிங்கம்’, ‘லிங்கா’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனித்த இடம் பெற்றார்.
பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமானாலும், உடல் எடை காரணமாக ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகினார்.
இப்போது, மீண்டும் திரும்பி வந்துள்ள அனுஷ்காவின் புதிய படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. இதற்காக மிகப்பெரிய தொகை கொடுத்து அந்த உரிமையை ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.