நேற்று இரவு ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள பிரிக்ஃபீல்ட்ஸ் உணவகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்; அவரது இரண்டு நண்பர்கள் காயமடைந்து மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.துப்பாக்கிச் சூடு இரவு 10.50 மணியளவில் நிகழ்ந்ததாக பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறைத் தலைவர் கு மஷாரிமான் தெரிவித்தார். மூவரும் நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்து இருக்கிறது.ஒருவருக்கு பலத்த காயம், மற்றவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் சந்தேக நபர்களை அடையாளம் காணும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றும், சம்பவம் குறித்து தகவல் உள்ளவர்கள் காவல்துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.