2025 தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை (ஹவானா) முன்னிட்டு நடைபெற்ற விருந்தில், தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், செயற்கை நுண்ணறிவு (AI) பத்திரிகையாளர்களை மாற்றும் என்பதில் நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.AI பயன்பாட்டை முழுமையாக புரிந்து கொண்டு, அதை உதவியாக பயன்படுத்தும் முறைகளை பத்திரிகையாளர்களும் ஊடக நிறுவனங்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், AI மற்றும் பிற தொழில்நுட்பங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.பத்திரிகையாளர்கள் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்காமல், மருத்துவ பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஃபஹ்மி நினைவூட்டினார்.
புதிய சவால்கள் இருந்தாலும், உண்மை மற்றும் சரிபார்க்கப்பட்ட செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர்களின் பங்களிப்பை சமூகமெங்கும் அதிகமாக மதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்."புதிய சகாப்தத்தில் பத்திரிகை: செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதும், நெறிமுறைகளைப் பாதுகாப்பதும்" என்ற தலைப்பில் ஹவானா மாநாடு மூன்று நாள்கள் நடைபெறுகிறது. இதை நாளை கோலாலம்பூரில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் திறந்து வைக்கிறார்.