அம்பாங், ஜாலான் பாண்டான் இண்டாவில் உள்ள அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை, சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஒரு வயதான பெண்ணின் மரணத்தில் எந்தக் குற்றவியல் கூறுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார். பிரேத பரிசோதனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த வழக்கு திடீர் மரண அறிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று மாலை கோலாலம்பூர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் எந்த குற்றவியல் கூறுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தின என்று அவர் இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் பாண்டான் இண்டாவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது குறித்து பொதுமக்களில் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு அறிக்கை கிடைத்ததாக அவர் மேலும் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை முதல் வயதான பெண்ணின் வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதை குடியிருப்பாளர் ஒருவர் கவனித்ததாக ஊடக அறிக்கைகள் முன்னதாக தெரிவித்தன. அந்தப் பெண் தனது சொந்த ஊரில் ஹிஜ்ஜு விடுமுறையைக் கழித்த பிறகு சமீபத்தில் வீடு திரும்பியதாகத் தெரிகிறது.