கங்கார்:
நேற்று காலை 8.30 மணியளவில் கங்காரில் உள்ள மேடான் மஹ்கோத்தா சாலையின் வாகன நிறுத்துமிடத்தில் பெண் ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து கங்கார் காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பைப் பெற்றதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வழிபறியில் ஈடுப்பட்ட 37 வயது உள்ளூர் ஆடவரைக் கைது செய்ததாக கங்கார் மாவட்டக் காவல்துறை தலைவர் ஆணையர் யூசாரிபுடின் முஹமட் யூசூப் தெரிவித்தார்.
49 வயது பெண் ஒருவர் வாகனத்திலிருந்து பொருள்களை எடுக்கும் போது, சந்தேக பின்னாலிருந்து வந்து அப்பெண்ணைத் தாக்கி வழிப்பறியில் ஈடுப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக் சுதாரித்துக்கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவனைப் பிடித்து சரமாரியாகத் தாக்கி மயக்கமடைய செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என அவர் மேலும் கூறினார்.
சந்தேக நபரிடமிருந்து RM1,000 ரொக்கப்பணம், USD250 அமெரிக்க டாலர்கள், 10,570 Thailand Bath ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொள்ளை குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 392 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேக நபர் இன்று முதல் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.