ஈரானில் இஸ்ரேலின் தாக்குதலால் மாநில ஒளிபரப்பாளர் IRIB தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திங்கள் அன்று, ஈரானில் நடந்த இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களில் 224 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானும் பதிலுக்கு ஏவுகணைகள் வீசி, இஸ்ரேலில் மட்டும் 11 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், "ஈரான் பிரச்சாரக் குரல் அழிக்கப்படும்" என எச்சரித்தார்.இந்த மோதல் சர்வதேசத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக நாடுகள் அமைதிக்கான அழைப்புகளை விடுத்துள்ளன. ட்ரம்ப், இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.