Offline
19வது OANA பொதுக்குழு ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பெர்கில் தொடங்கியது.
By Administrator
Published on 06/20/2025 09:00
News

உலகின் முக்கிய செய்தி நிறுவன மாநாடாகக் காணப்படும் ஆசிய-பசிபிக் செய்தி நிறுவனங்களின் அமைப்பின் (OANA) 19வது பொதுக்குழு, இன்று ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பெர்கில் தொடங்கியது.TASS நிறுவனம் இந்தக் கூட்டத்தை "செய்தி நிறுவனங்கள் மற்றும் நவீன உலகின் சவால்கள்" என்ற தலைப்பில் நடத்தியது. ஆரம்ப உரையினை TASS இயக்குனர் ஆண்ட்ரே கொன்ட்ரஷோவ் நிகழ்த்தினார். அதன்பின்னர் OANA தலைவரும், ஈரானின் IRNA இயக்குநருமான ஹொசேன் ஜபெரி அன்சாரி வீடியோவழி உரையாற்றினார். ஈரான்-இஸ்ரேல் மோதலால் ஈரான் குழுவினர் நேரில் வரவில்லை.30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் பங்கேற்று வருகின்றனர். மலேசியாவின் பெர்னாமா நிறுவனத்திலிருந்து தலைமை நிர்வாகி நூர்-உல் அஃபிதா மற்றும் தலைமை ஆசிரியர் அருள் ராஜூ கலந்துகொண்டுள்ளனர்.TASS நிறுவனம் வரும் மூன்று ஆண்டுகளுக்கான OANA தலைமை பொறுப்பை ஏற்கிறது. மேலும் புதிய நிர்வாக குழு, துணைத் தலைவர்கள், தொழில்நுட்ப மற்றும் ஒழுக்கக் குழுக்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.OANA, UNESCOவின் முயற்சியில் 1961ல் தொடங்கப்பட்டது. இன்று 33 நாடுகளிலிருந்து 41 செய்தி நிறுவனங்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

Comments