ஒரு பேஸ்கட் பால் போட்டியில் உயரத்தை கிண்டல் செய்த சீனியர் பயிற்சியாளரின் கன்னத்தில் அறைந்த ஆமிர்கான், பிறகு மதுபோதையில் போலீஸ் வாகனத்தை மோதுகிறார். நீதிமன்றத்தில் சமூக சேவைக்கு ஒப்புக்கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் சேர்ந்தார்.
முதலில் அவர்களை கேலி செய்யும் ஆமிர்கான், காலப்போக்கில் உணர்ச்சிப் பூர்வமாக அவர்களை புரிந்து கொண்டு, தேசிய போட்டிக்கு அவர்களை தயார்செய்கிறார். இக்கதையின் முக்கியத் தோழியாக ஜெனிலியா, ஆழமான உரையாடல்களுடன் குர்பால் சிங் சிறப்பாக விளங்குகிறார்கள்.
‘சாம்பியன்ஸ்’ என்ற ஸ்பானிஷ் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம், சிரிப்பும் உணர்ச்சியும் சமமா கலந்திருக்கும்.
கிளைமேக்சில் ஆமிர்கானின் மாற்றத்துடன் வரும் உரை நம்மை நெகிழச் செய்கிறது.
இயக்குநர் மாற்றுத்திறனாளிகள் எப்படி உலகை பார்கிறார்கள் என்பதை சித்தரித்த விதம் பாராட்டத்தக்கது.