பாடகி சின்மயி வைரமுத்து குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் சில வருடங்களுக்கு முன்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதை அடுத்து பலர் தங்களுக்கு நடந்த மீ டு பிரச்சனையை வெளிப்படையாக பேச தொடங்கினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சின்மயி தேவையில்லாமல் பேசுவதாக கூறி தமிழில் அவர் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடகி தீ வர முடியாத சூழலில் முத்த மழை பாடலை சின்மயி மேடையில் பாடினார். அதுதான் தற்போது அவர் மீண்டும் பேசப்படுவதற்கு காரணம்.
வைரமுத்துவின் பதில் இதுதான்
எதற்காக இத்தனை வருடம் அவரை ஒதுக்கி வைக்க வேண்டும். வைரமுத்துவுக்கு பெரிய இடத்தில் இருந்து சப்போர்ட் இருக்கிறது. அதனால் தான் திறமையான ஒரு பாடகி முடக்கப்பட்டு விட்டார் என அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் குவிந்தது.