துருக்கியில் கடந்த வாரங்களாக காட்டுத்தீ பரவி பெரும் நொறுக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடமேற்கில் உள்ள பெரிய நகரமான புர்சா பகுதியில் தீ பரவுவதால், அங்காராவுடனான சாலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்க 1,900க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணி புரிந்துள்ளனர். வனத்துறை மந்திரி இப்ராகிம் யுமாக்லி கூறுகையில், 84 இடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டு, வடமேற்கு பகுதி மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.வானிலை இயக்குநரகம் 122.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதையும் தெரிவித்துள்ளது. இதுவரை 14 பேர் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்து, 7,000 ஏக்கர் நிலங்கள் எரிந்து நாசமாகி, 1,700 பேர் பாதுகாப்பு நாடி புலம்பெயர்ந்துள்ளனர்.